Posts

Image
                                   நாங்கள் இருக்கிறோம் உங்களோடு பயணிக்க ...... பட்டாசு என்றாலே வானில் வர்னஜால வித்தைகளை காட்டி குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி கைதட்டி ஆரவாரம் செய்து நம்மை நம் மனதை சந்தோஷம் கொள்ளச் செய்யும் பண்டிகைகளில் தீபாவளி ஒன்றே இம்மகிழ்ச்சிக்கு பின்னால் இதோ எம் தொழிலாளர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதன் பின் இருப்பது மூனு வேளை சாப்பாடு, வறுமை இதனை கச்சிதமாக பயன்படுத்தும் ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் இதனை கேட்க நாதியற்று கிடக்கும் நம் அரசு  இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின்  கொடிக்கம்பங்கள் தெருமுனைகளில் கம்பீரமாகவும் தொய்ந்தும் பறந்து கொண்டிருக்கும் இக்கட்சிகளின் கொள்கை என்ன கோட்பாடு என்ன தத்துவம் என்ன ? எதுவும் தெரியாது ஆனால் இக்கட்சிக்கு இம்மக்கள் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் ஆனால் இம்மக்களின் வாழ்கைத் துயரங்கள் குறித்து வெற்றி பெற்ற அரசியல் இயக்கங்கள் என்றாவது...
Image
CITU பட்டாசு தொழிலாளிகளுக்கு  ஆதரவாக திருத்தங்கலில் இரயில் மறியல் போராட்டத்தில் போராளிகள்
Image
                    பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டம்      12.1.18                                                                                                                     விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளிகளுக்கு  வேலை இல்லா காலநிவாரணம் வழங்க கோரி   # CITU  பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில்  பெருந்திரள் முறையீடு போராட்டம்
Image
                                                கட்டுக்கடங்காத தொழிலாளர்கள்                                                                                                   பெண்களின் எழுச்சி மிக்க கோஷங்கள்  வேண்டும் வேண்டும் பட்டாசு தொழில் வேண்டும்!!! வாழ விடு.. வாழ விடு..... பாது காப்போம் பாதுகாப்போம்!!  பட்டாசு தொழிலை பாதுகாப்போம்!!! உச்சநீதிமன்றத்தில் தீபாவளி முடிந்த பின்பு பட்டாசு உற்பத்தியை தடைசெய்திட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இவ்வழக்கு விசாரணை வருகின்ற 5-1-1.18 அன்று வருகிறது இதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் 26.12.17 அன்று முதல் நடைபெறுகிறது சிஐடியூ பட்ட...
Image
சாத்தூர் அருகே எலுமிச்சங்காய்பட்டியில் முனியசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும்போது, இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ராமசந்திரன், பாலமுருகன் இருவரும் படுகாயமடைந்தார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது ராமச்சந்திரன் மரணம்
Image
மீண்டும் ஒரு அனுபவ பகிர்வு                                 ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் சிவகாசியின் பட்டாசு தொழில் நிலவரங்கள் பற்றி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து விபரங்களை சேகரிக்க வந்திருந்தனர் சில கிராமங்களுக்கு சென்றோம் செல்லும் வழியில் நாராணபுரம் அருகே நுாறு நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் முதியோர்கள் ஏராளம் உட்கார்ந்திருந்தார்கள் காரை நிறுத்த சொன்னேன் அவர்களிடம் எதற்காக வந்தோம் என்பதை சொல்லி விட்டு உட்கார்ந்தோம் கேள்விகளுக்கு பதில் இதோ கருப்பா யி (மஞ்சள் சேலைகட்டியவர்) என்ற அம்மா வெளுத்து கட்டி விட்டார் வடக்க இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கலன்னா அவுங்க பிள்ளைகளுக்கு பாதிப்புன்னு சொல்றாங்க ஆனா இங்க எங்க பி்ள்ளைகள் மட்டும் இல்ல குடும்பமே இத நம்பிதான் என் பேரன் 1150 மார்க் வாங்கிருக்கான் மெடிக்கல்ல சீட்டு கிடைக்கலயாம் 5லட்சம் கேட்டாங்க கட்டமுடியல பட்டாசுல வேலை பாக்குறது அன்றாடம் வயித்துக்கு சரியா போகுது இந்த மோடி பணம் செல்லாதுன்னு சொன்னாரு நாங்க...
பட்டாசு தொழிலாளிக்கு உதவித் தொகை  பெரும் மகிழ்ச்சியில் நான்......... கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூபன் கேப்ஸ் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் முருகேஸ்வரி என்ற பெண்மணி பாதிக்கப்பட்டார் அவருக்கு உடம்பெல்லாம் தீக்காயம் கண்பார்வை பறிபோய் விட்டது பல அரசியல் கட்சிகள் ஆறுதலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர் இவரின் கணவரோ உன்னோடு குடும்பம் நடத்த முடியாது என்றும் கைவிட்டு போய்விட்டார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கேட்க சென்ற போது அவர் படும் பாட்டை பார்த்தேன் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எல்லோரும் வாராங்க யாரும் உதவ தயாரில்லை என்று புலம்பினார்  உடனடியாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பத்தேன் தொடர்ந்து கவனம் செலுத்தினேன்  இவருக்கு உதவி கிடைக்க வில்லையெனில் எத்தகைய நிலைக்கும்செல்வேன் என்று அதிகாரியிடம் தெரிவித்தேன் அதிகாரியும் உறுதியளித்தனர் தற்போது இம்மாதம் முதல் ரூபாய் 1000 உதவிதொகை கிடைத்துவிட்டது ஆகப்பெரும் மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்