சாத்தூர் அருகே எலுமிச்சங்காய்பட்டியில் முனியசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மருந்து கலக்கும்போது, இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ராமசந்திரன், பாலமுருகன் இருவரும் படுகாயமடைந்தார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது ராமச்சந்திரன் மரணம்
நாங்கள் இருக்கிறோம் உங்களோடு பயணிக்க ...... பட்டாசு என்றாலே வானில் வர்னஜால வித்தைகளை காட்டி குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி கைதட்டி ஆரவாரம் செய்து நம்மை நம் மனதை சந்தோஷம் கொள்ளச் செய்யும் பண்டிகைகளில் தீபாவளி ஒன்றே இம்மகிழ்ச்சிக்கு பின்னால் இதோ எம் தொழிலாளர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதன் பின் இருப்பது மூனு வேளை சாப்பாடு, வறுமை இதனை கச்சிதமாக பயன்படுத்தும் ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் இதனை கேட்க நாதியற்று கிடக்கும் நம் அரசு இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் தெருமுனைகளில் கம்பீரமாகவும் தொய்ந்தும் பறந்து கொண்டிருக்கும் இக்கட்சிகளின் கொள்கை என்ன கோட்பாடு என்ன தத்துவம் என்ன ? எதுவும் தெரியாது ஆனால் இக்கட்சிக்கு இம்மக்கள் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் ஆனால் இம்மக்களின் வாழ்கைத் துயரங்கள் குறித்து வெற்றி பெற்ற அரசியல் இயக்கங்கள் என்றாவது...

Comments
Post a Comment